160. முன்னு மொருவ ரிரும்பொழில் மூன்றற்கு முற்றுமிற்றாற் பின்னு மொருவர்சிற் றம்பலத் தார்தரும் பேரருள்போல் துன்னுமொ ரின்பமென் றோகைதந் தோகைக்குச் சொல்லுவபோல் மன்னு மரவத்த வாய்த்துயில் பேரும் மயிலினமே.