பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
334

162

162. விண்ணுக்கு மேல்வியன் பாதலக்
        கீழ்விரி நீருடுத்த
    மண்ணுக்கு நாப்பண் நயந்துதென்
        தில்லைநின் றோன்மிடற்றின்
    வண்ணக் குவளை மலர்கின்
        றனசின வாண்மிளிர்நின்
    கண்ணொக்கு மேற்கண்டு காண்வண்டு
        வாழுங் கருங்குழலே.