162. விண்ணுக்கு மேல்வியன் பாதலக் கீழ்விரி நீருடுத்த மண்ணுக்கு நாப்பண் நயந்துதென் தில்லைநின் றோன்மிடற்றின் வண்ணக் குவளை மலர்கின் றனசின வாண்மிளிர்நின் கண்ணொக்கு மேற்கண்டு காண்வண்டு வாழுங் கருங்குழலே.