பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
335

163

163. நந்தீ வரமென்னும் நாரணன்
        நாண்மலர்க் கண்ணிற்கெஃகந்
    தந்தீ வரன்புலி யூரனை
        யாய்தடங் கண்கடந்த
    இந்தீ வரமிவை காணின்
        இருள்சேர் குழற்கெழில்சேர்
    சந்தீ வரமுறி யும்வெறி
        வீயுந் தருகுவனே.