பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
336

164

164. காமரை வென்றகண் ணோன்தில்லைப்
        பல்கதி ரோனடைத்த
    தாமரை யில்லின் இதழ்க்கத
        வந்திறந் தோதமியே
    பாமரை மேகலை பற்றிச்
        சிலம்பொதுக் கிப்பையவே
    நாமரை யாமத் தென் னோவந்து
        வைகி நயந்ததுவே.