பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
337

165

165. அகிலின் புகைவிம்மி ஆய்மலர்
        வேய்ந்தஞ் சனமெழுதத்
    தகிலுந் தனிவடம் பூட்டத்
        தகாள்சங் கரன்புலியூர்

    இகலு மவரிற் றளருமித்
        தேம்ப லிடைஞெமியப்
    புகிலு மிகஇங்ங னேயிறு
        மாக்கும் புணர்முலையே.