168. நற்பகற் சோமன் எரிதரு நாட்டத்தன் தில்லையன்ன விற்பகைத் தோங்கும் புருவத் திவளின் மெய்யேயெளிதே வெற்பகச் சோலையின் வேய்வளர் தீச்சென்று விண்ணினின்ற கற்பகச் சோலை கதுவுங்கல் நாடஇக் கல்லதரே.