17. புணர்ப்போன் நிலனும் விசும்பும் பொருப்புந்தன் பூங்கழலின் துணர்ப்போ தெனக்கணி யாக்குந்தொல் லோன்தில்லைச் சூழ்பொழில்வாய் இணர்ப்போ தணிகுழ லேழைதன் னீர்மையிந் நீர்மையென்றாற் புணர்ப்போ கனவோ பிறிதோ அறியேன் புகுந்ததுவே.