பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
146

17

17. புணர்ப்போன் நிலனும் விசும்பும்
        பொருப்புந்தன் பூங்கழலின்
   துணர்ப்போ தெனக்கணி யாக்குந்தொல்
        லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்

இணர்ப்போ தணிகுழ லேழைதன்
        னீர்மையிந் நீர்மையென்றாற்
   புணர்ப்போ கனவோ பிறிதோ
        அறியேன் புகுந்ததுவே.