பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
344

170

170. பைவா யரவும் மறியும்
        மழுவும் பயின்மலர்க்கை
    மொய்வார் சடைமுடி முன்னவன்
        தில்லையின் முன்னினக்காற்
    செவ்வாய் கருவயிர்ச் சேர்த்திச்
        சிறியாள் பெருமலர்க்கண்
    மைவார் குவளை விடும்மன்ன
        நீண்முத்த மாலைகளே.