பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
352

177

177. விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண்
        தில்லைமெல் லங்கழிசூழ்
    கண்டலை யேகரி யாக்கன்னிப்
        புன்னைக் கலந்தகள்வர்

    கண்டிலை யேவரக் கங்குலெல்
        லாம்மங்குல் வாய்விளக்கும்
    மண்டல மேபணி யாய்தமி
        யேற்கொரு வாசகமே.