பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
353

178

178. பற்றொன்றி லார்பற்றுந் தில்லைப்
        பரன்பரங் குன்றினின்ற
    புற்றொன் றரவன் புதல்வ
        னெனநீ புகுந்துநின்றால்

    மற்றுன்று மாமல ரிட்டுன்னை
        வாழ்த்திவந் தித்தலன்றி
    மற்றொன்று சிந்திப்ப ரேல்வல்ல
        ளோமங்கை வாழ்வகையே.