பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
354

179

179. பூங்கணை வேளைப் பொடியாய்
        விழவிழித் தோன்புலியூர்
    ஓங்கணை மேவிப் புரண்டு
        விழுந்தெழுந் தோலமிட்டுத்
    தீங்கணைந் தோரல்லுந் தேறாய்
        கலங்கிச் செறிகடலே
    ஆங்கணைந் தார்நின்னை யும்முள
        ரோசென் றகன்றவரே.