182. ஆரம் பரந்து திரைபொரு நீர்முகில் மீன்பரப்பிச் சீரம் பரத்திற் றிகழ்ந்தொளி தோன்றுந் துறைவர்சென்றார் போரும் பரிசு புகன்றன ரோபுலி யூர்ப்புனிதன் சீரம்பர் சுற்றி யெற்றிச் சிறந்தார்க்குஞ் செறிகடலே.