189. பொன்னும் மணியும் பவளமும் போன்று பொலிந்திலங்கி மின்னுஞ் சடையோன் புலியூர் விரவா தவரினுள்நோய் இன்னு மறிகில வாலென்னை பாவம் இருங்கழிவாய் மன்னும் பகலே மகிழ்ந்திரை தேரும்வண் டானங்களே.