பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
366

189

189. பொன்னும் மணியும் பவளமும்
        போன்று பொலிந்திலங்கி
    மின்னுஞ் சடையோன் புலியூர்
        விரவா தவரினுள்நோய்

    இன்னு மறிகில வாலென்னை
        பாவம் இருங்கழிவாய்
    மன்னும் பகலே மகிழ்ந்திரை
        தேரும்வண் டானங்களே.