பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
368

190

190. கருங்கழி காதற்பைங் கானலில்
        தில்லையெங் கண்டர்விண்டார்
    ஒருங்கழி காதர மூவெயில்
        செற்றவொற் றைச்சிலைசூழ்ந்
    தருங்கழி காதம் அகலுமென்
        றூழென் றலந்துகண்ணீர்
    வருங்கழி காதல் வனசங்கள்
        கூப்பும் மலர்க்கைகளே.