பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
371

193

193. வளருங் கறியறி யாமந்தி
        தின்றுமம் மர்க்கிடமாய்த்
    தளருந் தடவரைத் தண்சிலம்
        பாதன தங்கமெங்கும்

    விளரும் விழுமெழும் விம்மும்
        மெலியும்வெண் மாமதிநின்
    றொளிருஞ் சடைமுடி யோன்புலி
        யூரன்ன வொண்ணுதலே.