பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
376

195

195. மணியக் கணியும் அரன்நஞ்ச
        மஞ்சி மறுகிவிண்ணோர்
    பணியக் கருணை தரும்பரன்
        தில்லையன் னாள்திறத்துத்
    துணியக் கருதுவ தின்றே
        துணிதுறை வாநிறைபொன்
    அணியக் கருதுகின் றார்பலர்
        மேன்மே லயலவரே.