பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
127

2

2. போதோ விசும்போ புனலோ
      பணிக ளதுபதியோ
  யாதோ வறிகுவ தேது
      மரிதி யமன்விடுத்த
  தூதோ வனங்கன் றுணையோ
      விணையிலி தொல்லைத்தில்லை
  மாதோ மடமயி லோவென
      நின்றவர் வாழ்பதியே.