200. மாவைவந் தாண்டமென் னோக்கிதன் பங்கர்வண் தில்லைமல்லற் கோவைவந் தாண்டசெவ் வாய்க்கருங் கண்ணி குறிப்பறியேன் பூவைதந் தாள்பொன்னம் பந்துதந் தாளென்னைப் புல்லிக்கொண்டு பாவைதந் தாள்பைங் கிளியளித் தாளின்றென் பைந்தொடியே.