பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
389

206

206. நிழற்றலை தீநெறி நீரில்லை
        கானகம் ஓரிகத்தும்
    அழற்றலை வெம்பரற் றென்பரென்
        னோதில்லை யம்பலத்தான்
    கழற்றலை வைத்துக்கைப் போதுகள்
        கூப்பக்கல் லாதவர்போற்
    குழற்றலைச் சொல்லிசெல் லக்குறிப்
        பாகும்நங் கொற்றவர்க்கே.