பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
391

208

208. மற்பாய் விடையோன் மகிழ்புலி
        யூரென் னொடும்வளர்ந்த
    பொற்பார் திருநாண் பொருப்பர்
        விருப்புப் புகுந்துநுந்தக்
    கற்பார் கடுங்கால் கலக்கிப்
        பறித்தெறி யக்கழிக
    இற்பாற் பிறவற்க ஏழையர்
        வாழி எழுமையுமே.