208. மற்பாய் விடையோன் மகிழ்புலி யூரென் னொடும்வளர்ந்த பொற்பார் திருநாண் பொருப்பர் விருப்புப் புகுந்துநுந்தக் கற்பார் கடுங்கால் கலக்கிப் பறித்தெறி யக்கழிக இற்பாற் பிறவற்க ஏழையர் வாழி எழுமையுமே.