பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
394

211

211. பனிச்சந் திரனொடு பாய்புனல்
        சூடும் பரன்புலியூர்
    அனிச்சந் திகழுமஞ் சீறடி
        யாவ அழல்பழுத்த
    கனிச்செந் திரளன்ன கற்கடம்
        போந்து கடக்குமென்றால்
    இனிச்சந்த மேகலை யாட்கென்கொ
        லாம்புகுந் தெய்துவதே.