212. வைவந்த வேலவர் சூழ்வரத் தேர்வரும் வள்ளலுள்ளந் தெய்வந் தருமிருள் தூங்கு முழுதுஞ் செழுமிடற்றின் மைவந்த கோன்தில்லை வாழ்த்தார் மனத்தின் வழுத்துநர்போல் மொய்வந்த வாவி தெளியுந் துயிலுமிம் மூதெயிலே.