பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
397

213

213. பறந்திருந் தும்பர் பதைப்பப்
        படரும் புரங்கரப்பச்
    சிறந்தெரி யாடிதென் தில்லையன்
        னாள்திறத் துச்சிலம்பா
    அறந்திருந் துன்னரு ளும்பிறி
        தாயின் அருமறையின்
    திறந்திரிந் தார்கலி யும்முற்றும்
        வற்றுமிச் சேணிலத்தே.