பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
404

219


219. அன்பணைத் தஞ்சொல்லி பின்செல்லும்
        ஆடவன் நீடவன்றன்
    பின்பணைத் தோளி வருமிப்
        பெருஞ்சுரஞ் செல்வதன்று
பொன்பணைத் தன்ன இறையுறை
        தில்லைப் பொலிமலர்மேல்
    நன்பணைத் தண்ணற வுண்அளி
        போன்றொளிர் நாடகமே.