பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
153

22

22. உளமாம் வகைநம்மை யுய்யவந்
        தாண்டுசென் றும்பருய்யக்
   களமாம் விடமமிர் தாக்கிய
        தில்லைத்தொல் லோன்கயிலை

   வளமாம் பொதும்பரின் வஞ்சித்து
        நின்றொர்வஞ் சிம்மருங்குல்
   இளமான் விழித்ததென் றோஇன்றெம்
        மண்ண லிரங்கியதே.