பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
415

229

229. தழுவின கையிறை சோரின்
        தமியமென் றேதளர்வுற்
    றழுவினை செய்யுநை யாவஞ்சொற்
        பேதை யறிவுவிண்ணோர்
    குழுவினை உய்யநஞ் சுண்டம்
        பலத்துக் குனிக்கும்பிரான்
    செழுவின தாள்பணி யார்பிணி
        யாலுற்றுத் தேய்வித்ததே.