பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
154

23

23. சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத்
        தில்லைச்சிற் றம்பலத்து
   மாணிக்கக் கூத்தன் வடவான்
        கயிலை மயிலைமன்னும்
   பூணிற் பொலிகொங்கை யாவியை
        யோவியப் பொற்கொழுந்தைக்
   காணிற் கழறலை கண்டிலை
        மென்றோட் கரும்பினையே.