230. யாழியன் மென்மொழி வன்மனப் பேதையொ ரேதிலன்பின் தோழியை நீத்தென்னை முன்னே துறந்துதுன் னார்கண்முன்னே வாழியிம் மூதூர் மறுகச்சென் றாளன்று மால்வணங்க ஆழிதந் தானம் பலம்பணி யாரின் அருஞ்சுரமே.