பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
419

233

233. வைம்மலர் வாட்படை யூரற்குச்
        செய்யுங்குற் றேவல்மற்றென்
    மைம்மலர் வாட்கண்ணி வல்லள்கொல்
        லாந்தில்லை யான்மலைவாய்
    மொய்ம்மலர்க் காந்தளைப் பாந்தளென்
        றெண்ணித்துண் ணென்றொளித்துக்
    கைம்மல ராற்கண் புதைத்துப்
        பதைக்குமெங் கார்மயிலே.