234. வேயின தோளி மெலியல்விண் ணோர்தக்கன் வேள்வியின்வாய்ப் பாயின சீர்த்தியன் அம்பலத் தானைப் பழித்துமும்மைத் தீயின தாற்றல் சிரங்கண் ணிழந்து திசைதிசைதாம் போயின எல்லையெல் லாம்புக்கு நாடுவன் பொன்னினையே.