பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
420

234

234. வேயின தோளி மெலியல்விண்
        ணோர்தக்கன் வேள்வியின்வாய்ப்
    பாயின சீர்த்தியன் அம்பலத்
        தானைப் பழித்துமும்மைத்

    தீயின தாற்றல் சிரங்கண்
        ணிழந்து திசைதிசைதாம்
    போயின எல்லையெல் லாம்புக்கு
        நாடுவன் பொன்னினையே.