பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
423

237

237. தெள்வன் புனற்சென்னி யோன்அம்
        பலஞ்சிந்தி யாரினஞ்சேர்
    முள்வன் பரல்முரம் பத்தின்முன்
        செய்வினை யேனெடுத்த
    ஒள்வன் படைக்கண்ணி சீறடி
        யிங்கிவை யுங்குவையக்
    கள்வன் பகட்டுர வோனடி
        யென்று கருதுவனே.