பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
427

241

241. பாயும் விடையோன் புலியூ
        ரனையவென் பாவைமுன்னே
    காயுங் கடத்திடை யாடிக்
        கடப்பவுங் கண்டுநின்று
    வாயுந் திறவாய் குழையெழில்
        வீசவண் டோலுறுத்த
    நீயும்நின் பாவையும் நின்று
        நிலாவிடும் நீள்குரவே.