பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
431

244

244. மீண்டா ரெனஉவந் தேன்கண்டு
        நும்மையிம் மேதகவே
    பூண்டா ரிருவர்முன் போயின
        ரேபுலி யூரெனைநின்
    றாண்டான் அருவரை ஆளியன்
        னானைக்கண் டேனயலே
    தூண்டா விளக்கனை யாயென்னை
        யோஅன்னை சொல்லியதே.