244. மீண்டா ரெனஉவந் தேன்கண்டு நும்மையிம் மேதகவே பூண்டா ரிருவர்முன் போயின ரேபுலி யூரெனைநின் றாண்டான் அருவரை ஆளியன் னானைக்கண் டேனயலே தூண்டா விளக்கனை யாயென்னை யோஅன்னை சொல்லியதே.