249. ஆண்டி லெடுத்தவ ராமிவர் தாமவ ரல்குவர்போய்த் தீண்டி லெடுத்தவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின்வாய்த் தூண்டி லெடுத்தவ ரால்தெங்கொ டெற்றப் பழம்விழுந்து பாண்டி லெடுத்தபஃறாமரை கீழும் பழனங்களே.