பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
439

250

250. எழுங்குலை வாழையின் இன்கனி
        தின்றிள மந்தியந்தண்
    செழுங்குலை வாழை நிழலில்
        துயில்சிலம் பாமுனைமேல்
    உழுங்கொலை வேல்திருச் சிற்றம்
        பலவரை உன்னலர்போல்
    அழுங்குலை வேலன்ன கண்ணிக்கென்
        னோநின் னருள்வகையே.