250. எழுங்குலை வாழையின் இன்கனி தின்றிள மந்தியந்தண் செழுங்குலை வாழை நிழலில் துயில்சிலம் பாமுனைமேல் உழுங்கொலை வேல்திருச் சிற்றம் பலவரை உன்னலர்போல் அழுங்குலை வேலன்ன கண்ணிக்கென் னோநின் னருள்வகையே.