252. சிறார்கவண் வாய்த்த மணியிற் சிதைபெருந் தேனிழுமென் றிறால்கழி வுற்றெஞ் சிறுகுடில் உந்து மிடமிதெந்தை உறாவரை யுற்றார் குறவர்பெற் றாளுங் கொடிச்சிஉம்பர் பெறாவரு ளம்பல வன்மலைக் காத்தும் பெரும்புனமே.