பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
442

253

253. கடந்தொறும் வாரண வல்சியின்
        நாடிப்பல் சீயங்கங்குல்
    இடந்தொறும் பார்க்கும் இயவொரு
        நீயெழில் வேலின்வந்தால்
    படந்தொறுந் தீஅர வன்னம்
        பலம்பணி யாரினெம்மைத்
    தொடர்ந்தொறுந் துன்பென் பதேஅன்ப
        நின்னருள் தோன்றுவதே.