பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
444

254

254. களிறுற்ற செல்லல் களைவயிற்
        பெண்மரங் கைஞ்ஞெமிர்த்துப்
    பிளிறுற்ற வானப் பெருவரை
        நாட பெடைநடையோ
    டொளிறுற்ற மேனியன் சிற்றம்
        பலம்நெஞ் சுறாதவர்போல்
    வெளிறுற்ற வான்பழி யாம்பகன்
        நீசெய்யும் மெய்யருளே.