257. வான்றோய் பொழிலெழின் மாங்கனி மந்தியின் வாய்க்கடுவன் தேன்றோய்த் தருத்தி மகிழ்வகண் டாள்திரு நீள்முடிமேல் மீன்றோய் புனற்பெண்ணை வைத்துடை யாளையும் மேனிவைத்தான் வான்றோய் மதில்தில்லை மாநகர் போலும் வரிவளையே.