258. நறைக்கண் மலிகொன்றை யோன்நின்று நாடக மாடுதில்லைச் சிறைக்கண் மலிபுனற் சீர்நகர் காக்குஞ்செவ் வேலிளைஞர் பறைக்கண் படும்படுந் தோறும் படாமுலைப் பைந்தொடியாள் கறைக்கண் மலிகதிர் வேற்கண் படாது கலங்கினவே.