பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
449

258

258. நறைக்கண் மலிகொன்றை யோன்நின்று
        நாடக மாடுதில்லைச்
    சிறைக்கண் மலிபுனற் சீர்நகர்
        காக்குஞ்செவ் வேலிளைஞர்
    பறைக்கண் படும்படுந் தோறும்
        படாமுலைப் பைந்தொடியாள்
    கறைக்கண் மலிகதிர் வேற்கண்
        படாது கலங்கினவே.