பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
450

259

259. கலரா யினர்நினை யாத்தில்லை
        அம்பலத் தான்கழற்கன்
    பிலரா யினர்வினை போலிருள்
        தூங்கி முழங்கிமின்னிப்

புலராஇரவும் பொழியா
        மழையும்புண் ணில்நுழைவேல்
    மலரா வரும்மருந் தும்மில்லை
        யோநும் வரையிடத்தே.