பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
457

265

265. வாரிக் களிற்றின் மருப்புகு
        முத்தம் வரைமகளிர்
    வேரிக் களிக்கும் விழுமலை
        நாட விரிதிரையின்
    நாரிக் களிக்கமர் நன்மாச்
        சடைமுடி நம்பர்தில்லை
    ஏரிக் களிக்கரு மஞ்ஞையிந்
        நீர்மையென் னெய்துவதே.