268. குன்றங் கிடையுங் கடந்துமர் கூறும் நிதிகொணர்ந்து மின்றங் கிடைநும் மையும்வந்து மேவுவன் அம்பலஞ்சேர் மன்றங் கிடைமரு தேகம்பம் வாஞ்சியம் அன்னபொன்னைச் சென்றங் கிடைகொண்டு வாடா வகைசெப்பு தேமொழியே.