272. அருந்தும் விடமணி யாம்மணி கண்டன்மற் றண்டர்க்கெல்லாம் மருந்து மமிர்தமு மாகுமுன் னோன்தில்லை வாழ்த்தும்வள்ளல் திருந்துங் கடன்நெறி செல்லுமிவ் வாறு சிதைக்குமென்றால் வருந்தும் மடநெஞ்ச மேயென்ன யாமினி வாழ்வகையே.