பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
475

278

278. மன்செய்த முன்னாள் மொழிவழியே
        அன்ன வாய்மைகண்டும்
    என்செய்த நெஞ்சும் நிறையும்நில்
        லாவென தின்னுயிரும்
    பொன்செய்த மேனியன் றில்லை
        யுறாரிற் பொறையரிதாம்
    முன்செய்த தீங்குகொல் காலத்து
        நீர்மைகொல் மொய்குழலே.