பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
479

281

281. வருவன செல்வன தூதுகள்
        ஏதில வான்புலியூர்
    ஒருவன தன்பரின் இன்பக்
        கலவிகள் உள்ளுருகத்
    தருவன செய்தென தாவிகொண்
        டேகியென் நெஞ்சிற்றம்மை
    இருவின காதல ரேதுசெய்
        வானின் றிருக்கின்றதே.