பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
480

282

282. வேயின மென்தோள் மெலிந்தொளி
        வாடி விழிபிறிதாய்ப்
    பாயின மேகலை பண்டையள்
        அல்லள் பவளச்செவ்வி
    ஆயின ஈசன் அமரர்க்
        கமரன்சிற் றம்பலத்தான்
    சேயின தாட்சியிற் பட்டன
        ளாம்இத் திருந்திழையே.