285. குயிலிதன் றேயென்ன லாஞ்சொல்லி கூறன்சிற் றம்பலத்தான் இயலிதன் றேயென்ன லாகா இறைவிறற் சேய்கடவும் மயிலிதன் றேகொடி வாரணங் காண்கவன் சூர்தடிந்த அயிலிதன் றேயிதன் றேநெல்லிற் றோன்று மவன்வடிவே.