பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
485

286

286. வேலன் புகுந்து வெறியா
        டுகவெண் மறியறுக்க
    காலன் புகுந்தவி யக்கழல்
        வைத்தெழில் தில்லைநின்ற
    மேலன் புகுந்தென்கண் நின்றா
        னிருந்தவெண் காடனைய
    பாலன் புகுந்திப் பரிசினின்
        நிற்பித்த பண்பினுக்கே.