பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
490

290

290. வண்டலுற் றேமெங்கண் வந்தொரு
        தோன்றல் வரிவளையீர்
    உண்டலுற் றேமென்று நின்றதொர்
        போழ்துடை யான்புலியூர்க்
கொண்டலுற் றேறுங் கடல்வர
        எம்முயிர் கொண்டுதந்து
    கண்டலுற் றேர்நின்ற சேரிச்சென்
        றானொர் கழலவனே.